districts

img

உடுமலை சுற்றுலா தலங்களை பராமரிக்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.16- உடுமலை பகுதியில் உள்ள அம ராவதி மற்றும் திருமூர்த்தி அணை யில் அமைந்து இருக்கும் பூங்காவை  பராமரிப்பு செய்யாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில்  இருந்து 20 கிலோ மீட்டர் தொலை வில்,  மேற்கு தொடர்சிமலை அடி வார பகுதியில் அமராவதி மற்றும்  திருமூர்த்தி அணைகள் கட்டப்பட் டுள்ளது. இந்த இரண்டு அணைக ளின் கரை பகுதியில் அழகான பூங்கா  அமைக்கப்பட்டது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகி றார்கள். மேலும் விடுமுறை தினத்தில்  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகிறார்கள். பூங்கா அமைக்கப் பட்ட நாள் முதல் பராமரிப்பு எதுவும்  செய்யாமல் யாரும் பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.  கடந்த வருடம் ஜூலை மாதம்  தமிழ்நாடு முதல்வர் உடுமலை அமரா வதியில் உள்ள சைனிக் பள்ளியின்  விழாவிற்கு வருவதாக அறிவிக்கப் பட்டது. இதையடுத்து அமராவதி மற் றும் திருமூர்த்தி அணை பூங்காக் களைப் பராமரிப்பு செய்ய பல லட்சம்  ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டது. ஆனால் முதல் வர் வருகை மாற்றப்பட்ட உடன்  அனைத்து வேலைகளும் நிறுத்தப் பட்டது. அணைப்பகுதி பூங்கா பரா மரிப்பு வேலைகளும் நிறுத்தப் பட்டது. இதற்காக ஒதுக்கிய நிதியை  என்ன செய்தார்கள் என்று தெரிய வில்லை. இந்த இரண்டு பூங்காவும் பொதுப் பணித்துறையின் கட்டுப் பாட்டில் இருப்பதால் அரசு ஒதுக் கிய நிதியில் பூங்கா பராமரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும். மேலும் வேலைகளைப் பாதியில் நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது.