districts

img

தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.16- பாலவாடி ஊராட்சியில் துவங்கி கொட்டாய், வெள்ளாளர்கொட்டாய், கவுண்டர் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு தார்சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட, பாலவாடி ஏரிக்கரை முதல் மொளப்பனம்பட்டி வரை செல்லும் சாலை மற்றும் பாலவாடி மயானத்துக்கு செல்லும்  சாலை, ஆகியவை நீண்டகாலமாக மண் சாலையாக உள் ளது. இப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தருமபுரிக்கு செல்ல மண் சாலையில் போக்கு வரத்து வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக் காலங்களில் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறி  விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்ல முடிவ தில்லை. விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர முடிவதில்லை. இச்சாலை தார்சாலையாக மாற்றி யமைக்கப்பட்டால் தருமபுரியிலிருந்து செக்கோடி, பள்ளிப் பட்டி வழியாக செல்லும் அரசு நகரப் பேருந்து இச்சாலை வழி யாக இயக்க முடியும். இதனால் இப்பகுதி மக்களுக்கு தரும புரிக்கு நேரடி பேருந்து வசதி கிடைக்கும். எனவே, 7 இடங்க ளில் உள்ள மண் சாலையை தார்சாலை மற்றும் சிமெண்ட்  சாலையாக மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். மேலும், சாலை அமைந்துள்ள நிலம் அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கார ணத்தைக் காட்டி, சாலைப் பணியை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும், எனவும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.