districts

img

உரிய தேதிகளில் அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.2- உரிய தேதிகளில் அகவி லைப்படி உயர்வு அறிவிப்பு  செய்யாமல் காலம் தாழ்த்தி  அறிவிப்பு செய்வதைக் கண் டித்து, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் உடு மலை வட்டக்கிளைகள் சார் பில் திங்களன்று  உடுமலை  வட்டாட்சியர் அலுவலகம்   முன்பாக ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது.  வட்டார தலைவர் தாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் தேர்தல் சமயத்தில் சொன்னது போல்  ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்ற  வேண்டும். ஒன்றிய அரசு அறிவிக்கும் நாள்  முதல் மாநில அரசும் அகவிலைப்படி வழங் கும் வழக்கத்தை மாற்றாமல் குறித்த தேதி  முதல்  அகவிலைப்படி வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மத்திய  மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூ தியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  தலைவர் செல்லத்துரை, மாவட்டச் செயலா ளர் பாலகிருஷ்ணன் கண்டன உரையாற் றினர். இணை செயலாளர் ஆறுமுகம் நன்றி  கூறினார்.