districts

img

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜுலை 24- குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெருந்துறை இடைக்கமிட்டியின் 9 ஆவது மாநாடு பெருந்துறையில் வசந்தாமணி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிரசன்னா உரையாற்றினார். விவசாய சங்க தலைவர் பி.முத்து பழனிச் சாமி வாழ்த்துரையாற்றினார். இம்மாநாட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடும் தனியார் நுண்நிதி நிறுவனங் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை  திட்டத்தில் தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையான குடும்ப தலைவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் பெருந்துறை இடைக் கமிட்டி தலைவராக ஜெயலட்சுமி, செயலாளராக பி.ஜெயக் கொடி, பொருளாளராக ஹரிதா கௌரி, துணைத்தலைவராக எம்.மாதேஸ்வரி, துணைச்செயலாளராக கே.ஜோதி உட்பட 11 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. முடி வில், மாவட்ட தலைவர் பா.லலிதா  நிறைவுரையாற்றினார். வி.ஹரிதா நன்றி கூறினார்.