சேலம், நவ.7- தேர்தல் அறிக்கையில் கூறி யதை முதல்வர் உடனடியாக நிறை வேற்ற வேண்டும், என அரசு ஊழி யர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட 15 ஆவது மாநாடு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ந.திருவேரங்கன் தலைமையில் ஒய்எம்சிஏ அரங்கத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. அதன்படி, வெள்ளி யன்று மாவட்ட மகளிர் மாநாடு நடை பெற்றது. மேட்டூர் வசந்தியின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கி.ரேச்சல் கலைச் செல்வி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ராணி, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் செல்வராணி ஆகியோர் உரை யாற்றினார். இதையடுத்து சனி யன்று நடைபெற்ற மாநாட்டில், மாவட்ட துணைத்தலைவர் வெ.அர்த் தனாரி வரவேற்றார். இணைச்செய லாளர் நா.திருநாவுக்கரசு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத் தலைவர் ரா.சுப்பிரமணியன் துவக் கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். அம்மா பேட்டை மண்டல உதவி ஆணையர் கோ.வேடியப்பன் சிறப்புரையாற் றினார். அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் அ.நட ராஜன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலா ளர் பெரியசாமி ஆகியோர் வாழ்த் திப் பேசினர். சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு இருந்து துவங்கிய பேரணியை, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சம்பந்தமாக தேர்தல் அறிக்கையில் கூறியதை, முதல் வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண் டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களை பயன்ப டுத்தி, காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் சேலம் மாவட்டத் தலைவராக ந.திருவேரங்கன், செயலாளராக சுரேஷ், பொருளாளராக அ.சண் முகம் மற்றும் நிர்வாகக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைப் பொதுச்செயலா ளர் மு.சீனிவாசன் நிறைவுரையாற் றினார். முடிவில், மாவட்ட இணைச் செயலாளர் து.சிங்கராயன் நன்றி கூறினார்.