கோவை, ஜூன் 27- கூடலூர் மலைப்பாதை யில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் சூழலில், போக்குவரத்து விதிமுறை களை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என போக் குவரத்து காவல் துறையி னர் வலியுறுத்தி உள்ளனர். கேரளா - கர்நாடகா மாநி லங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணி கள் கூடலூர் வழியாக உதகை சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக் கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது. அப் போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளை பல வாகன ஓட்டுநர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. உதகையிலிருந்து வரும் போது, நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை உள்ளதால், பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. இதனால் மலைப்பாதை யில் 2 ஆவது கியரை பயன்படுத்தி வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறையினர் சாலை யோரம் நின்று வெளிமாநில ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கூடலூர் - கேரள சாலைகள், உதகை செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட் டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வரு கின்றன. மலைப்பாதையில் வாகனங்களை அதிவே கத்தில் இயக்கக்கூடாது. மேலும், பின்பற்ற வேண்டிய விதி முறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும், என்றனர்.