திருப்பூர், ஆக.17- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய் வூதியர் சங்க 7 ஆவது மாவட்ட பேரவை திருப்பூர் கே.ஆர்.சி.சிட்டி செண்டரில் வியாழனன்று நடை பெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற பேரவையில், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய், கிராம ஊழியர், ஊர்ப்புற நூலகர் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுடேசன் பிடித்த காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சிறப்பு ஓய்வூதி யம் பெறும் அனைவரையும் மருத் துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றபட்டது. முன்னதாக மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் சங்க கொடியை ஏற்றி னார். மாநிலத் துணைத் தலைவர் என். அரங்கநாதன் துவக்க உரையாற்றி னார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.பால கிருஷ்ணன் செயலாளர் அறிக் கையை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் கே.மேகவர்ணன் வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ. நிசார் அகமது, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.மணியன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்டத் தலைவர் எம்.நாட்ரா யன், ஓய்வுபெற்ற காவலர் நல சங்கம் மாவட்டத் தலைவர் பி.பாலகிருஷ் ணன், தமிழ்நாடு சத்துணவு அங்கன் வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செய லாளர் பி.ரீட்டா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி நிறைவுரையாற்றினார். இதில் ஓய்வூதியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.