districts

img

வாணியாறு கிளை கால்வாயை தூர்வார வலியுறுத்தல்

தருமபுரி நவ.30- தருமபுரி அருகே உள்ள வாணி யாறு கிளை கால்வாயை தூர்வார வேண்டுமென மாவட்ட நிர்வாகத் திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்தில் வாணியாறு அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக இந்த அணை நிரம்பியது. இதனால் கடந்த ஒரு மாதமாக வாணியாறு அணை யில் இருந்து உபரிநீர் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இடதுபுற கால்வாய் வழியாக வெளி யேற்றப்படும் உபரிநீர் வெங்கட சமுத்திரம், மோளையானூர், தேவ ராஜபாளையம், விழுதப்பட்டி,  மெணசி, பூதநத்தம், ஆலாபுரம், ஜம் மனஅள்ளி ஆகிய பகுதிகள் வழி யாக செல்கிறது.  விழுதிப்பட்டி அருகே அப்புகல் மலை அடிவாரத்தில் இடது புற கால் வாயில் இருந்து கிளை கால்வாய் பிரிந்து செல்கிறது. இதன் மூலம்  நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய  நிலங்கள் பாசன வசதி பெற்று வரு கிறது. இந்தநிலையில் அந்த கிளை கால்வாய் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் புதர்களின் ஆக் கிரமிப்பில் உள்ளது. இதனால் அணை கட்டப்பட்ட நாளிலிருந்து இதுவரை 3 முறை மட்டுமே இக் கிளை கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றுள் ளது.

கால்வாய் தூர்வாரப்படாததால் பல ஆண்டுகளாக இதன் வழியாக தண்ணீர் செல்லவில்லை.  இதனால் தண்ணீர் இல்லாமல் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் பரவலாக மழை பெய் துள்ளதால் வாணியாறு அணை நிரம் பியதால், உபரிநீர் திறந்து விடப்பட் டுள்ளது. இந்த தண்ணீர் விவசாய பணிக்கு உபயோகமின்றி வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், கிளை கால்வாயை தூர்வாரி சீர மைக்க வலியுறுத்தி  பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வாணியாறு இடதுபுற கிளை கால்வாயை தூர்வாரி, தண் ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.