ஈரோடு, நவ.24- மின்பாதையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முறையிட்டது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா தலைமையில் வளர்ச்சி மன்ற கூட்ட ரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் மனு கொடுத்து முனுசாமி பேசுகையில், ராசிபாளையம் முதல் பால வாடி வரை 400 கி.வா மின்பாதை, ஈரோடு மாவட்டத்தின் வழியாக அமைக்கப்படுகி றது. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர். மேற்படி மின்பாதை கட்டுமா னம் முடியும் நிலையை எட்டியுள்ளது. ஆனால், நிலத்திற்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. ஆகவே, மாவட்ட ஆட் சியர் தலையிட்டு காலம் தாழ்த்தாமல் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நிலக் குடியேற்ற கூட்டுறவு சங்க நிலங்கள் 377.62 ஏக்கர் உள்ளன. ஆயக்கட்டு பாசன பகுதி யான இந்நிலங்களில் 195 ஏக்கருக்கு பாசன வசதி செய்யப்படவில்லை. இதற்கான முறை யீட்டின் பேரில் கடந்த 1987 ஆம் ஆண்டு அன் றைய மாவட்ட ஆட்சியர் கால்வாயில் 3 மதகு கள் அமைத்து அந்நிலங்களுக்கு தண்ணீர் விட உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்த ரவு தற்போது வரை நடைமுறைப்படுத்த வில்லை. ஆகவே, இதுகுறித்து தொடர் முறையீடுகள் செய்து வருகிறோம். மேலும், காலம் தாழ்த்தாமல் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு மதகுகள் அமைத்து தண்ணீர் வழங்க ஆவண செய்ய வேண்டும், என்றார். கரும்பு வெட்டுக்கூலி ஈரோடு மாவட்டத்தில் சக்தி ஆலை, பண் ணாரி ஆலை மற்றும் ஈஐடி பாரி கரும்பு ஆலைகள் உள்ளன. மேற்கண்ட ஆலைக ளில் கரும்பு வெட்டும் ஆட்கள் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண் டும். இதன் மூலம் வெட்டுக்கூலியை முறைப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடம்பூர் வன சரகத்திற்குட்பட்ட குத் தியாலத்தூர் ஊராட்சியில் எக்கத்தூர் உள் ளிட்ட பகுதிகளில் யானைகளால் பயிர் சேதம டைந்ததற்கு இழப்பீடு கோரப்பட்டது.
இதில் 90 விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள் ளதாக கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிவாரணம் முழுமையாகக் கிடைக் கவில்லை. எனவே, தாங்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை முழுமையாகக் கிடைக்கவும், தவ றான தகவலை தெரிவிக்காமலிருக்க அதிகா ரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும், என்றார். நாட்டு சர்க்கரைக்கு உரிய விலை ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளிடத் தில் கரும்பு வாங்கி நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலைகளில் மகாராஷ்டிராவிலிருந்து கொண்டு வரும் சர்க்கரையையும், அஸ்காவையும் கலப்ப தாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கலப்படம் செய்யும் நாட்டு சர்க்கரையின் உற்பத்தி விலை குறைவாகிறது. அதனால் அதன் விற் பனை விலை குறைகிறது. ஆனால், கலப் பிடமில்லாமல் நாட்டு சர்க்கரை தயாரிப்பாள ருக்கு கட்டுப்படியான விலை கிடைப்ப தில்லை. ஆகவே, கலப்படத்தைத் தடுக்க வும், உரிய கட்டுப்படியான விலை கிடைக்க வும் தக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு முனுசாமி கேட்டுக் கொண்டார்.