உடுமலை, ஜன.17- உடுமலையை அடுத்த போளரப்பட்டி சிவன் கோவிலில் கால்நடை களுக்கான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சுவடி கள் பாதுகாப்புத்துறை மாநில ஒருங்கிணைப்பா ளர் ஆய்வாளர் சசிகலா, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினருடன் உடும லையிலுள்ள புராதனக் கோயில்களை ஆய்வு செய்தார். அப்போது, உடுமலை போளரப்பட்டிக்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் மல்லாண்டைக் கல்லும், அதனரு கில் தீப்பிழம்புகள் வெளிவருவது போன்ற கல்வெட்டு ஓவிய மும், தாமரை மலரிதழ்களை ஓவியமாக வடித்தும், ஓரங் களில் கல்வெட்டு எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை ஆய்வு செய்த பின்னர் ஆய்வாளர் சசிகலா கூறு கையில், இந்தக் கல்வெட்டு கால்நடைகளுக்காக பிரத்யோ கமாக வைக்கப்பட்ட கல்வெட்டு. நாட்டுப்புறங்களில் பழங் காலங்களில் மாட்டு வடாகம் எனப்படும் மந்திரக் குறியீடு களை குறிப்பதாகவும், மருத நிலத்தில் மேய்ச்சல் நிலமாக இருக்கும் கால்நடைகள் ஒரு எல்லையை விட்டு வெளியில் செல்லாமல் இருக்கவும், கால்நடைகளுக்குப் பருவகாலங் களில் வரக்கூடிய நோய்த் தொற்றுகளிலிருந்து காப்பதற்கா கவும் இவ்வாறான கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் விழிப்புணர்வு காரணத்தால் வயல்வெளி களில் இருந்த இந்த மந்திரக் கல்வெட்டினை எடுத்து வந்து இந்த கோயிலில் வைத்து வழிபட்டு வருவதாக அவர் தெரி வித்தார். முன்னதாக, இந்த ஆய்வின்போது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புறு தலைவர் முனைவர் விஜய லட்சுமி, வட்டார வளமை மேற்பார்வையாளர் ஆசிரியப் பயிற்றுநர் செ.ராபின், துணைத் தலைவர்கள் வி.கே.செல்வ ராஜ், ராஜசுந்தரம் ஆகியோரும் களப்பணியில் உடனி ருந்தனர்.