districts

img

போலி ஆவணங்கள் மூலம் ஜம்புக்கல் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு

உடுமலை, நவ.1- உடுமலை அருகே போலி ஆவணங்கள் மூலம் ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு செய் யப்பட்டது குறித்து புகார்கள் குவிந்த நிலை யில், புதனன்று கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதிநகர், ஆண்டியகவுண்டனூர், எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய கிராமங் களை உள்ளடக்கிய பகுதியில், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஜம்புக்கல் மலை அமைந்துள் ளது. இங்கு கடந்த 1970 - 71 ஆம் ஆண்டில் சுற் றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 350 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, தலா இரண்டு ஏக்கர் வரை, பல்வேறு விதிமுறைகளுடன் ‘நிபந் தனை பட்டா’ வழங்கப்பட்டன. இதில் மரங் களை அழிக்கக்கூடாது. 3 அடி ஆழத்திற்கு கீழ் நிலத்தை தோண்டக்கூடாது. நீர்நிலைகளை அழிக்கக்கூடாது. நிலங்களை விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றிருந்தன. பருவமழை காலத் தில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், சட்டத் திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி,  போலி ஆவணங்கள் மூலமாக, நிலபரிவர்த் தனை மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கு சொந் தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மலைப் பகுதி அழிக்கப்பட்டது. மேலும், பட்டா உரிமையாளர்களாக உள்ள விவசாயிகளையும் அனுமதிக்காமல், சிலர் வழித்தடத்தை அடைத்தும், மிரட்டியும் வருகின்றனர். ஜம்புக்கல் மலைத்தொடரை யும், பசுமையும் காக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். உயிருடன் உரிமையாளர்களும், வாரிசுகளும் உள்ள நிலையில், 700க்கும் மேற் பட்ட ஏக்கர் நிலங்கள், வருவாய்த்துறை வழங் குவது போல, வாரிசு, நில உரிமை சான்று  போலியாக தயாரிக்கப்பட்டு, போலியான நபர் களை கொண்டு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்துறை ஆவணங் களில் மாற்றம் செய்யப்பட்டு, ஜம்புக்கல் மலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியை ஆக்கிரமித்தவர்கள், போலி ஆவ ணங்கள் வாயிலாக விவசாயிகள் நிலத்திற் குள்ளே நுழைய முடியாமல் தடுத்து மிரட்டி வருகின்றனர். கண்டிசன் பட்டாவில் விற்பனை செய்ய  முடியாது.

உரிமையாளர்கள், வாரிசுகள் விவ சாயம் செய்யாவிட்டால், நிலத்தை அரசு எடுத் துக்கொள்ளும் என்ற விதி உள்ளது. இதனை யும் மீறி, போலி ஆவணங்கள் மூலம் ஏழை  விவசாயிகளின் நில உரிமை பறிக்கப்பட்டுள் ளது. மேலும், அரசுக்கு சொந்தமான பல ஆயி ரம் ஏக்கர் நிலங்களும் ஆக்கிரமித்து, பசுமை யான மலை அழிக்கப்பட்டு வருகிறது. இதில்  நடந்த மோசடிகள், போலி ஆவணங்கள் குறித்தும், உரிமையாளர்கள் பெயர் ஆள்  மாறாட்டம் செய்யப்பட்டது, பதிவுத்துறை யில் ஆவணம் பதிவு, வருவாய்த்துறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து 200க்கும் மேற்பட்ட ஆவணங்களின் நகல் களை உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் விவசாயிகள் மனுவாக அளித் தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் விவ சாயிகள் நிலங்களை மீட்கவும், இந்த மோசடி யில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தினர். இதனடிப்படையில், புதனன்று அமரா வதி நகரிலுள்ள ஆண்டியகவுண்டனுார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கோட் டாட்சியர் தலைமையில் விசாரணை நடை பெற்றது. புகாரளித்த விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், உரிய ஆவ ணங்களுடன் வருவாய் கோட்டாச்சியர் ஜஸ் வந்த் கண்ணன் முன்பு நேரில் ஆஜராகினர். விரிவான விசாரணைக்கு பிறகு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த அதிகா ரிகள் தெரிவித்தனர்.