பொள்ளாச்சி, மே 26- ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத் தில் வன உயிரின கணக்கெடுப்பு பணி கள் துவங்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக் கோட்டத்திற்குட்பட்ட (உலாந்தி) டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான் கள், வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் மழைகாலத் திற்கு முந்தைய வன விலங்கு கணக் கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகி றது. இந்த ஆண்டிற்கான கோடைகால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத் தரவிட்டது. இதையடுத்து, மே 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பொள் ளாச்சி வனக் கோட்டத்தில் உள்ள 4 வனச்சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி யது. பயிற்சி அளிக்கப்பட்ட வனத் துறை ஊழியர்களை தனித்தனி குழுக் களாக பிரிந்து, வனப்பகுதியில் 60 நேர்கோட்டுப் பாதைகள் அமைத்து, வனவிலங்குகளின் காலடித்தடங்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்கீறல் கள், எச்சம் உள்ளிட்டவைகளை ஜி. பி.எஸ் கருவி மற்றும் செயலி மூலம் பதிவு செய்தனர்.
வனவிலங்கு கணகெடுப்பில் சேக ரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் இறுதி நாளன்று ஆனைமலை புலி கள் காப்பக கள இயக்குனரிடம் சமர்ப் பிக்கப்பட்டு பின்னர் தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர் கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனைமலை புலி கள் காப்பகத்தின் கள இயக்குனர் ராம சுப்ரமணியம் உத்தரவுப்படி, துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத் தலின் பேரில் வனவிலங்குகள் கணக் கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. மேலும், வன உயிரின கணக்கெடுப்பு பற்றிய அறிமுக மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்பு, வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 32 பகுதிகளில் உள்ள 62 நேர்கோட்டு பாதைகளில் வன உயிரின கணக் கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகி றது. இத்தகவல் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.