திருப்பூர், ஏப்.13- இடுவாய் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநி யோக குழாய், தார் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப் பணிகள் புதனன்று தொடங்கி வைக்கப்பட்டன. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் புதனன்று 15 ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 5 லட்சத்து 92 ஆயிரத்து 988 மதிப்பீட்டில் சீரா ணம்பாளையம் செந்தில் நகர், பாரதி புரம், காமாட்சி நகர் அருகில் உள்ள கே.என்.எஸ். நகர் பகுதிகளில் குடி நீர் விநியோக குழாய்கள் பதிக்க வும், ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப் பீட்டில் இடுவாய் வடக்கு காலனி பகு தியிலும், மணியம் கந்தசாமி நகர் பகுதியிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வள்ளுவர் நகர் முதல் வீதியிலும், ரைஸ்மில் பகுதி குமரன் நகர் வீதியிலும் தார் சாலை அமைக்கவும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அத்துடன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ 5 லட்சம் மதிப்பீட் டில் பாரதிபுரம் சமுதாய கூட தரைக்கு பேவர் பிளாக் அமைக் கவும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் திரு மலை நகர் கிழமேல் வீதி, பாரதிபுரம் 4வது வீதி கிழக்குப் பகுதி தார் சாலை அமைக்கவும் வேலை துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள இந்த வேலைக ளுக்கு துவக்க நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் முன் னிலையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன் சிலர் பிரபு, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் ஆர்.ஈஸ்வரிஎம்.கணேசன், எஸ்.சுப்பிரமணி, முதலிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் விஸ்வலிங்கசாமி, ஊராட்சி மன்ற செயலாளர் நாக ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.