உதகை, ஜன.31- கூடலூர் பகுடிதயலி உள்ள மாக்கு மூலா வனப்பகுதியில் காய்ந்த மூங்கில் களை கணக்கெடுக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட கூடலூர், ஸ்ரீமதுரை, தேவர்சோலை, பாடந்துரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராள மான மூங்கில் காடுகள் அழிந்துள்ளன. சுமார் 50 ஹெட்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள மூங்கில் காடுகள் கடந்த இரண்டு வருடங்களில் மொத் தமாக பட்டுப் போயியுள்ளன. இவற் றில் சாலையோர பகுதிகளில் உள்ள மூங்கில் புதர்களில் இருந்து காய்ந்த மூங்கில்கள் உடைந்து விழுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மூங்கில்களை வெட்டி அகற்றுவதற் கும் வனப்பகுதியில் உள்ள காய்ந்த மூங்கில்களை அப்புறப்படுத்தி காகித ஆலைக்கு அனுப்புவதற்கான நடவ டிக்கைகளை தற்போது வனத்துறையி னர் துவங்கியுள்ளனர். இதற்காக மூங் கில் புதர்களை கணக்கெடுக்கும் பணி யில் வனத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். ஒவ்வொரு மூங்கில் புதருக்கும் ஒரு அடையாள எண் கொடுத்து, அதில் உள்ள மொத்த மூங்கில்கள், அவற்றின் பருமன், உயரம் ஆகிய வற்றை கணக்கெடுத்து வருகின்றனர். வனப்பகுதிகள் முழுவதுமாக கணக் கெடுக்கப்பட்டபின் டெண்டர் விடப் பட்டு தமிழ்நாடு காகித ஆலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.