districts

img

திருப்பூர் அரசுப் பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதி மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்துமா?

திருப்பூர், ஜூன் 15 – திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டா ரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் போதிய கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் நிய மனம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர் பார்க்கின்றனர். பின்னலாடை நகரமான திருப்பூரிலும், சுற்று வட்டார புறநகரப் பகுதிகளிலும் அரசுப்  பள்ளிகள், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியப்  பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்  சேர்க்கை வழக்கத்தை விட அதிகரித்துள் ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவைச் சந்தித்திருக்கும் நிலையில் பலர் வேலை, வருமானம் இழந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தனியார் மெட்ரிகுலே சன், சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில் தங் கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த பெற் றோர்கள் பலர் அங்குள்ள அதீத கட்டணம் கார ணமாக தொடர்ந்து அந்த பள்ளிகளில் தங்கள்  பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மட்டுமின்றி சுற்று  வட்டார பகுதிகளிலும் இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள் ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ள னர். ஜெய்வாபாய், நஞ்சப்பா, கேஎஸ்சி, பழ னியம்மாள் என மாநகரில் இருக்கும் மாநக ராட்சி மற்றும் அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி வீரபாண்டி, இடுவம்பாளையம், பூலுவபட்டி  பெருமாநல்லூர் என சுற்று வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளிலும் மாணவர் களைச் சேர்க்க பெற்றோர் கூட்டம் கூடுதலாக  இருந்தது. அதேசமயம் அரசு மற்றும் மாநகராட்சிப்  பள்ளிகளில் உரிய எண்ணிக்கைக்கு மேல் அதிகளவிலான மாணவர்களை சேர்க்க வேண்டும் என பலர் விண்ணப்பித்து வருகின் றனர். கல்வி ஆண்டு தொடங்கிவிட்ட நிலை யிலும் இன்னும் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தொடர்ந்து முயற்சித்து வரு கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் அரசுப் பள்ளிக ளில் பெற்றோர் - ஆசிரியர் கழகம், பள்ளி  மேலாண்மைக் குழு மூலமாக கூடுதலாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரி யர்கள் எண்ணிக்கை முழுமையாக நிரப்பப் படாமல் உள்ளது. இருக்கும் ஆசிரியர்களே  சமாளித்து அனைத்து வகுப்பு மாணவர்க ளுக்கும் பாடம் நடத்தக்கூடிய நிலை பரவ லாக உள்ளது. இது போதாதென பள்ளிகளில்  படிக்கும் மாணவ, மாணவிகள் எண்ணிக் கைக்கு ஏற்ப வகுப்பறைகளும் இல்லை.கழிப்பிட வசதியும் பற்றாக்குறையாக உள் ளது. திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள  நாச்சிபாளையம் பள்ளி, வீரபாண்டி பள்ளி, பெருமாநல்லூர் பள்ளி என எந்தப்பக்கம் போனாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலைமைக் காண முடிகிறது.  இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்க ளும், ஆசிரியர்களும் அந்தந்த பகுதி உள் ளாட்சி பிரதிநிதிகள் மூலமும், பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளூர் பிரமுகர்கள் மூலமும் சில ஏற்பாடுகளைச் செய்து சமா ளிக்கப் பார்க்கின்றனர். ஆனால் பள்ளியின் தேவைக்கு அது ஈடுசெய்வதாக இல்லை. எனவே, திருப்பூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி கள், இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பற் றிய முழுமையான தரவுகளை ஆய்வுக்கு உட் படுத்தி எந்தெந்த பள்ளியில் என்னென்ன தேவை உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை இட வசதி, இதர உபகரணங்கள் தேவை, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் ஆகியவை குறித்து பட்டியல் எடுத்து அனைத்து தேவைகளையும் நிறை வேற்ற தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை  கூடுதல் நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

பின்னலாடைத் தொழில் நகரமான திருப் பூர் செழிப்புடன் இருந்த சமயம் மாநிலம் மட்டு மின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த  தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளை இங் குள்ள பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு பெற் றோர் கூடுதல் முக்கியத்துவம் அளித்தனர். அரசு, மாநகராட்சிப் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளி களிலும் கூடுதல் தொகை செலவளித்துப் படிக்க வைக்கவும் தயாராக இருந்தனர். ஆனால், தற்போது நலிவைச் சந்தித்தி ருக்கும் திருப்பூரில் கல்வி நிலைமை மாற்றம்  கண்டு வருகிறது. வேலை இன்மையால் புலம்  பெயர்ந்து செல்வோர் ஒரு பகுதியினர் என் றால், இங்கேயே வேறு வேலை தேடி, கிடைக் கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தக்கூடி யோர் பெரும்பான்மையான உழைப்பாளி மக்கள் உள்ளனர். கடந்த மாநகராட்சி மாமன் றக் கூட்டத்தின்போது கூட மேயர் ந.தினேஷ் குமார் கூறுகையில், மாநகராட்சிப் பள்ளிக ளில் கடந்த ஆண்டு படித்து வந்தவர்களில் 600க்கும் மேற்பட்டோர் இடை விலகியுள் ளனர் என்று தெரிவித்தார். மற்றொரு புறம் கட்டணம் செலுத்த வசதி  இல்லாவிட்டாலும் எப்படியாவது நம்  பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று அரசுப் பள்ளிகளை பலர் நாடி வருவ தால் பள்ளிகளின் கட்டமைப்பை விட கூடுத லான மாணவ, மாணவிகள் சேர்க்கப்படும்  நிலை உள்ளது.  மாநிலத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது திருப்பூரில் இருக்கும் இந்த நிலை தனித்துவமானதாக உள்ளது. எனவே இதற்கு  மாநில அரசு, பள்ளிக் கல்வித் துறை சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் இங்குள்ள பல் லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லா விட்டால் இடைவிலகல், பலர் குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குப் போகும்  நிலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.  எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் கூறினர்.