districts

img

நகரமயத்தால் காணாமல் போன சிட்டுக்குருவிகள் உலக சிட்டுக்குருவி தின நிகழ்வில் தகவல்

திருப்பூர், மார்ச் 21 – நகரமயத்தால் சிட்டுக்குருவிகள் காணமல் போயின என்று திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற உலக சிட்டுக்குருவி தின  நிகழ்வில் பறவை ஆர்வலர்கள் தெரி வித்தனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்  அலகு-2 சார்பாக நான் சிட்டுக்குரு வியை நேசிக்கிறேன் என்ற மையக ருத்தை வழியுறுத்தி புதனன்று கல்லூரி  வளாகத்தில் சிட்டுக்குருவி தின கலந்து ரையாடல் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு  விருந்தினராக பறவை ஆர்வலர்கள் கீதாமணி மற்றும் முருகவேல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக் கும் நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது, புழுக்களை உண்டு வாழ்வ தால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை சிட் டுக்குருவி, மனிதர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வாழ்ந்த பறவை  தற்போது இல்லாமல் போனதற்கு கார ணம் செல்போன் டவர்கள் அல்ல, நகர மயமாதல் என்ற பெயரில் சிட்டுக்குருவி யின் வாழ்விடங்கள் இல்லாமல் போனதே இதற்குக் காரணம், தற்போது  கிராமப்புறங்களிலும், வயல்வெளிகளி லும் மட்டுமே இவற்றை காண முடிகி றது, மாணவர்களிடம் கேள்விகளை தொடுத்து சரியாக பதில் சொன்னவர் களுக்கு செயற்கை சிட்டுக்குருவி கூண் டுகளும், சிட்டுக்குருவி படங்களும் பரி சாக வழங்கினர்.