districts

img

நான்கு மாதங்களில் ஜி.என் மில்ஸ் மேம்பால பணிகள் முடிவடையும்

கோவை, மே 26- கோவை ஜி.என் மில்ஸ் மேம் பால பணிகள் அடுத்த நான்கு மாதங் களில் நிறைவடையும் என தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட் டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி. ஆர்.பி ராஜா கோவையில் புத னன்று செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங் களில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளபட்டதோடு ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடத்தபட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்த வரை பேருந்து வசதி குறித்த  கோரிக்கைகள் தான் அதிகமாக வந் துள்ளது. மேலும், வனத்துறையில் வழங்கபட வேண்டிய அனுமதிகள் குறித்த பிரச்சனைகள், மாசுகட்டுப் பாட்டு வாரியம் சார்ந்த புகார்கள், குறிப்பாக நொய்யலாற்றில் நிலவி வரும் மாசு தொடர்பான பிரச்சனை கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் மிகவும் குறைவாக  கிடைப்பதால் அதை சரிசெய்யக் கூடிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தென்னை விவசா யிகளின் பிரச்னைகளில் ஒன்றான  கொப்பரைத் தேங்காய் விலை  வீழ்ச்சி குறித்து பேசி இருக்கிறோம். பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அர சாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாங் கம் நடவடிக்கை எடுக்கும். பெரியநாயக்கன்பாளையம் பாலத்தை ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்க  அறிவுறுத்தபட்டிருக் கிறது. ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிக்கப்படும். கோவையில் இருந்து நாகப்பட்டி னம் வரை உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழித்தடம் ஒன்றை தொழில்துறையினர் கேட் டுள்ளனர். முந்தைய காலகட்டங்க ளில் பல்வேறு காரணங்களுக்காக 184 கோடி ரூபாய் மாற்றி செலவு  செய்யப்பட்டிருக்கிறது தெரியவந் தது. எந்த நோக்கத்துக்காக பணம் வாங்கப்பட்டதோ அதற்காக இல் லாமல் வேறு பணிகளுக்கு செலவி டப்பட்டுள்ளது. அதற்கான காரணங் களையும் கோவை மாநகராட்சி கூறி யிருக்கிறது என டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.