கோவை, ஜூன் 4- கோவையில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். கோவை காளப்பட்டி கருப்பராயன் பாளையம் நேரு நகர் சாலையை மேம்படுத்துதல், வீரியம்பாளையத் தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் அமைத்தல், உடையாம்பா ளையம், வெள்ளக்கிணறு, டி.வி.எஸ். நகர், இடையர்பாளையம், லாலி சாலை, உழவர் சந்தை, வடவள்ளி, பூசாரிபாளையம் உள்ளிட்ட பகுதிக ளில் சாலை பணிகள் ஆகியவற்றை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனியன்று துவங்கி வைத் தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர் களிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், கோவை மாநகரில் ஒரே நேரத்தில் 63 நகர் நல மையங்களுக்கு பணிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மாநகரில் ஏற்க னவே ரூ.198 கோடியில் சாலை அமைக் கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ரூ.113 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க பணிகள் துவங் கப்பட்டுள்ளது. ரூ.1,132 கோடி மதிப் பில் கோவை விமானநிலையம் விரி வாக்கம் செய்யப்பட உள்ளது. தற் போது, ரூ.800 கோடி மதிப்பில் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங் கள் 3 மாதங்களில் எடுக்கப்பட்டு, பணி கள் நடைபெறும். கோவையில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை திறக்க விரைவில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மாநகரில் உள்ள வார் டுகளில் செயல்படுத்த வேண்டிய திட் டங்களைக் கணக்கெடுக்க மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள் ளோம். 15 நாள்களில் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத் தப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா. கார்த்திக், பையா கிருஷ்ணன், மருத மலை சேனாதிபதி, ரவிச்சந்திரன் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.