கோவை, மார்ச் 9- கோவை விமான நிலைய விரி வாக்கத்திற்கான நில எடுப்பு பணி களை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க ஆலோசனைக் குழு கூட் டத்தில் திட்டமிடப்பட்டது. கோவை விமான நிலைய விரி வாக்கம் தொடர்பான ஆலோச னைக் குழு கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் புத னன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மாநக ராட்சி ஆணையாளர் ராஜகோ பால் சுன்கரா, கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வள வன், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், பி.ஆர்.ஜி.அருண் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதில், விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிப்பது குறித்தும், கூடுதல் விமானங்களை நிறுத்துவதற் கான வசதிகள் குறித்தும் விவா திக்கப்பட்டது. மேலும், விமான நிலையத்தை சுற்றிலும் கட்டிட இடி பாடுகள் மற்றும் இறைச்சி கழிவு களை கொட்டுவதை தடுப்பது, மழைநீர் வடிகால்களில் நீர் தேங்காமல் தடுப்பது மற்றும் கோவை - அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப் பது போன்றவை குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பல்வேறு ஆலோசனை களை முன்மொழிந்தார். இந்த ஆலோசனைகளை கேட்டறிந்த அதிகாரிகள், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத் திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதைத்தொடர்ந்து, கோவை விமான நிலைய விரி வாக்கத்துக்கான நில எடுப்பு பணி களை துரிதப்படுத்தி வரும் டிசம் பர் மாதத்திற்குள் நிறைவு செய் வது என்று கூட்டத்தில் திட்டமிடப் பட்டது.