திருப்பூர், ஜூன் 24- முட்டைக் கோழி பண்ணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்து பள்ளிபாளையம் மற் றும் கருப்பட்டிபாளையம் பகு தியைச் சேர்ந்த 100க்கும் மேற் பட்ட பொதுமக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாரா புரம் அடுத்த பள்ளிபாளையம் மற்றும் கருப்பட்டிபாளையம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் சாரதா மணி ஆகியோர் அங்கு முட்டைக் கோழி பண்ணை அமைத்து நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி யில் காற்று துர்நாற்றத்துடன் வீசுவதுடன் குழந்தைகள் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முட்டைக் கோழி பண்ணையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது புதிதாக கட்ட டம் கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அங்கு முட்டைக் கோழி பண்ணை நடத்தக்கூ டாது என்று பஞ்சாயத்தில் தீர்மானம் நிறை வேற்றி உள்ளோம். மேலும், தாராபுரம் உரி மையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இருப்பினும் முட்டைக் கோழி பண்ணை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் உடல் நலம் பாதிக்கப்படு வதோடு வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.