districts

img

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் இந்திரா நகர் மக்கள்

தருமபுரி, பிப்.18- தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட கக்கன்ஜி புரம் இந்திரா நகர் பகுதியில் குடிநீர், கழிப் பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் அப்பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றி யம், தடங்கம் ஊராட்சிக்குட்பட்டது கன் கன்ஜிபுரம் இந்திராநகர். இப்பகுதியில் நூற் றுக்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலனோர் தினக்கூலி வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந் நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து  தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந் துள்ளது. குறிப்பாக, ஒகேனக்கல் குடிநீர் வராததால் குடிநீர் விலைக்கு வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்  இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது பல வீடுகள் பழுதடைந்து, இடிந்து விழும் அபாயகரமான சூழல் உள் ளது. வீடு இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு முதல் மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். எனவே, வீடு இல்லா தவர்களுக்கு அரசு வழங்கும் வீடு, இல வச மனைபட்டா கேட்டு அதிகாரிகளிடம் விண்ணப்பத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதேபோல், கழிவுநீர் கால்வாய் அமைக் கப்படாததால், தெருவின் நடுவே கழிவுநீர் வழிந்தோடுவதுடன், பொதுக்கழிப்பறை இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திறந்தவெளியினை பயன் படுத்தும் நிலையே காணப்படுகிறது. எனவே, இப்பிரச்சனைகள் தொடர்பாக உடனடி யாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.