districts

img

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல்

திருப்பூர் ஜூன் 22- அக்னிபத் திட்டத்தின் முலம் இளைஞர்களின் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர்  ரயில் மறியல்  இடுப்பட்டனர். செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இந்த  போராட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சம்சீர்  அகமது மாவட்ட துணைத்தலைவர்கள் கல்கி, மணிகண்டன்,  மாவட்ட துணை செயலாளர்கள் ரேவந்த், பாலமுரளி  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹரி சுஜித்ரா ஜோதிபாசு  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர்.