திருப்பூர், ஜூலை 30 - திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவி நாசி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் உள்பட அரசு பள்ளிகளிலும் காலி பணியி டங்களை நிரப்ப வலியுறுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபயண இயக்கம் மேற் கொள்வதென இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு தீர்மானித்துள் ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 21ஆவது மாநாடு திருப்பூர் பெரியார் காலனி தியாகி சோமு செம்பு நினைவு வளா கத்தில், தியாகி அபிமன்யூ நினைவரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாநாட்டுக் கொடியை மாவட்டத் துணைச் செயலாளர் கு.பாலமுரளி ஏற்றி வைத்தார்.
அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் முன் பிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற வண் ணமயமான ஊர்வலம் தொடங்கி, அவிநாசி சாலை அ.புதூர் வழியாக பெரியார் காலனி யில் மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. முன் னதாக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் வலத்தில் வந்த மாணவர்களுக்கு மலர்க ளைத் தூவி வாழ்த்துத் தெரிவித்தனர். மாவட்டத் தலைவர் சா.பிரவீன்குமார் தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் வி.பி.சுப்பிரமணியம் வரவேற்றார். இம்மாநாட்டை தனியார் கல்லூரி ஆசிரியர் கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் க.ரா மசாமி தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் நாடு தற்போது இருக்கும் நெருக்கடியான நிலையில், சுதந்திரம், ஜனநா யகம், சோசலிசம் என்ற முழக்கத்துடன் மாண வர் சங்கம் நடத்தும் இந்த மாநாடு நம்பிக்கை அளிக்கிறது. படிப்போம், போராடுவோம் என்ற முழக்கத்துடன் செயல்படுவது இந்த நாட்டை சிறந்த வழியில் கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அகமது வேலைய றிக்கை முன் வைத்தார். மாநாட்டில் பங்கேற்ற மாணவ பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற் றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எம்.செல்வகுமார், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசே கர், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ச.பவித்ரா தேவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
இமமாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அவிநாசி, பல்லடம், காங்கே யம் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்ப றைகள், சுற்றுச்சுவர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முழுமை யாக நிறைவேற்ற வேண்டும், இம்மாவட்டத் தில் புதிய அரசு சட்டக் கல்லூரி, அரசு பொறி யியல் கல்லூரி அமைக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் திருப்பூர் மாவட்டத் தில் நடை பயண இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. புதிய கல்விக் கொள்கை யைக் கைவிட வேண்டும், நீட் தேர்வில் தமிழ கத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக சா.பிரவீன், மாவட்டச் செயலாளராக தௌ.சம்சீர் அக மது, மாவட்டத் துணைத் தலைவர்களாக ஷாலினி, கிருஷ்ணகுமார், கல்கிராஜ், சபரி, மாவட்டத் துணைச் செயலாளர்களாக ஹரி, மணிகண்டன், ஜோதிபாசு, மோகனபிரியா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்பட மொத்தம் 29 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.இந்த மாநாட்டின் முடிவில் மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் க.நிருபன் சக்கர வர்த்தி நிறைவுரை ஆற்றினார். வரவேற்புக் குழு சார்பில் ஸ்ரீ.ஹரி நன்றி கூறினார்.