திருப்பூர், அக். 7 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆத ரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் அரசு நிர்வாகம் தீவிர ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந் திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இது குறித்து மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.பிரவீன், மாவட் டச்செயலாளர் தௌ.சம்சீர் அகமது ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமுருகன் பூண்டி விவேகா னந்தா சேவாலயம் குழந்தைகள் காப்ப கத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவினை உண்ட காரணத்தால் 3 சிறுவர்கள் உயிரிழந் துள்ள நிலையில் மேலும் சிலர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆதரவற்றோரை காக்கும் காப்ப கங்களிலேயே இது போன்ற சம்பவம் நடைபெறுவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ள அந்த காப்பகம் உண்மையிலேயே குழந்தை களை காக்கும் காப்பகம் தானா என்கிற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவர்க ளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து அவர்கள் உயிரை பாதுகாக்க வேண்டும். மேலும் இப்படியான சம்ப வங்கள் நிகழாமல் இருக்க திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் காப்பகங்க ளில் உணவு, உறைவிடம், சுகாதாரம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற வகையில் உள்ள காப்பகங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். கடுமையான நடவ டிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இப்படியான சம்பவம் நிகழாமல் இருக் கும். எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் உடன டியாக மாவட்ட முழுவதும் உள்ள ஆதர வற்றோர் காப்பகங்களில் ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என இந்திய மாணவர் சங்கம் கோரி யுள்ளது.