districts

img

செஸ் வீரர்களுக்கு வாழ்த்து

திருப்பூர் ஜூலை 28- செஸ் ஒலிம்பியாட் போட் டியில் பங்கேற்கும் இந்திய மற்றும் தமிழக வீரர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாழ்த்து முழக் கம் எழுப்பினர். சென்னையில் வியாழக்கி ழமை தொடங்கிய 44 ஆவது  செஸ் ஒலிம்பியாட் போட்டி யில் பங்கேற்கும் இந்திய மற் றும் தமிழக வீரர்களுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரி வித்து திருப்பூர் அவிநாசி சாலை பஸ் நிறுத்தத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முழக்கம் எழுப்பினர்.  திருப்பூர்  வடக்கு மாநகரத் தலைவர் செ.கண்ணன் தலைமையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட துணைச்  செயலாளர் எஸ் அருள் வாழ்த்திப் பேசி னார். வடக்கு மாநகர செயலாளர் விவேக் பொருளாளர் தி.கிருத்திகை வாசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று செஸ் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.