திருப்பூரில் இன்று சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு
திருப்பூர், ஆக.13 - தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் திருப்பூர் மாவட்ட அமைப்பு சார்பில் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத் தப்படுகிறது. 76 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி செவ்வாயன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலை யில், ஒன்றிய பாஜக அரசால், மக்கள் ஒற்றுமையை அச்சுறுத் தலுக்கு உள்ளாக்கி, அரசியல் சட்டத்தை சீர்குலைத்து, சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறது. இதற்கு எதிராக இந்தியர்கள் என்ற முறையில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், அரசியல் சட்டத்தை பாது காக்கவும், சமூக நல்லிணக்கம் பேணுவோம், வெறுப்பை விலக்கி அன்பை விதைப்போம்! என்ற முழக்கத்துடன் திருப் பூரில் திங்களன்று மாலை 5 மணிக்கு ரயில் நிலையம் அருகில் தியாகி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாநகர மேயர் ந. தினேஷ்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திருமுருகன்பூண்டி ஆதீனம் சுந்தரராச அடிகள், திராவிடர் கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி உள்பட பல் வேறு அரசியல் இயக்கங்கள், சமூக பொது நல அமைப்பு கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் பங் கேற்க உள்ளனர்.
நிலுவை தொகைகளை உடனே வழங்க நெசவாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஈரோடு, ஆக.13- இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை உற்பத்தி செய்து கொடுத்த நிலுவை தொகை வழங்க நெசவாளர் கூட்டுறவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவா ளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வெளியி டப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை ரகங்கள் உற்பத்தி செய்து அரசிற்கு வழங்கி வருகிறோம். அதன்படி விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி சேலை தயாரித்து அளித்த வகையில் 2023 ஆம் ஆண்டு ரூ. 19 கோடி பாக்கி உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்து கொடுத்த வகையில் ரூ.13 கோடியும், நடப்பாண்டு நெசவு கூலியாக ரூ.23 கோடி நிலுவை உள்ளது. ஆக மொத்தம் ரூ.55 கோடி நிலுவை உள்ளது. இதனால் சங்கங்கள் நிதி சுழற்சியின்றி நடை முறைப் பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. எனவே, இத்தொகையினை உடனடியாக வழங்க வழங்க வேண்டும். 2013-14 ஆம் ஆண்டில் பள்ளி சீருடை உற்பத்திக்கான தொகையை அரசு வழங்கியுள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 25 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 75 விழுக்காடு தொகையை உடனடியாக மாநில சங்கம் வழங்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என சங்க கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சாலையோர கடைக்கு அனுமதி வழங்கிடுக
சேலம், ஆக.13- நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப் பட்ட சாலையோர கடைகளை மீண்டும் வைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டு மென சிஐடியு சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாநகரம், அஸ்தம்பட்டி முதல் கோரிமேடு வரை சாலையோரத்தில் சுமார் 65 கடைகள், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து வாழ்வாதாரத்தை பாது காத்து வந்தனர். இந்நிலையில், ஜூலை 9ஆம் தேதியன்று கடைகளை நெடுஞ் சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இந்த இடம் நடைபயிற்சி செய்வதற்கு என தெரிவித்திருந்தனர். இதனால் சாலை யோர வியாபாரிகள் கடந்த ஒரு மாதமாக வாழ்வாதாரமின்றி கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.விஜயலட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பொதுமக்களுக்கு இடை யூறு இன்றி சாலையோர கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடையை அப்புறப்படுத்தி விட்டதால் தங் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை நடை பயிற்சி முடித்த வுடன் 9 மணிக்கு மேல் கடையை வைக்க மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தனசேகர் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆசனூர் வனப்பகுதியில் குட்டியுடன் சாலையை கடந்த யானை
ஈரோடு, ஆக.13- ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையை கடந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக அமைந் துள்ள சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நட மாடுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், சனியன்று ஆசனூர் அருகே தேசிய நெடுஞ் சாலையில் ஒரு காட்டு யானை தனது குட்டியுடன் சாலையில் அங்குமிங்கும் நடமாடியது. இத னால், சாலையில் சென்ற அரசு பேருந்து உள்ளிட்ட மற்ற வாகனங் கள் காட்டு யானை நடமாட்டத்தால் தொடர்ந்து சாலையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மேலும், குட்டியுடன் காட்டு யானை நடமாடுவதை கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அச்ச மடைந்தனர். ஒரு சில பயணிகள் காட்டு யானைகள் சாலையில் நட மாடுவதை செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பதிவிட்டனர். சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்த படி நடமாடிய காட்டு யானை குட்டி யுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் சாலையில் காட்டு யானைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நாளை மதுக்கடைகள் மூடல்
நாமக்கல், ஆக.13- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தில் சுதந் திர தினத்தை முன்னிட்டு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அர சால் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, செவ்வாயன்று (நாளை) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும். இதைமீறி மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந் தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சேலம், ஆக.13- சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜங்ஷன் ரயில் நிலை யத்தில் காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். நாடு முழுவதும் 76 ஆவது சுதந்திர தின விழா (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவ தும் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே உதவி ஆணையாளர் பெரியசாமி தலைமையில், ஒவ்வொரு நடைமேடை பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரயில்களிலும் ஏறி காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன், பயணிகளின் உடை மைகளை சோதனை மேற்கொண்டனர். மேலும், தடை செய் யப்பட்ட பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதா? என் றும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வெறிநாய் கடித்து 11 பேர் காயம்
நாமக்கல், ஆக.13- குமாரபாளையத்தில் சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுமி உட்பட 11 நபர்களை வெறிநாய் கடித்ததில் பாதிக்கப் ்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - எடப்பாடி சாலை யில் உள்ள காவிரி நகர் மற்றும் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது சாலையில் நடந்து சென்ற சிறுமி உட்பட 11 நபர் களை நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள், உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இதனையடுத்து சுபத்ரா என்ற ஒன்பது வயது சிறுமி மற்றும் வெங்கடாசலம் என்பவருக்கு நாய் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டதால், இருவர்கள் மட்டும் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காயமடைந்தவர் களின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் உடனடியாக தெருவில் சுற்றித்திரிந்த அந்த வெறிநாயை பிடித்து சென்ற னர். குமாரபாளையம் நகராட்சி முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி நக ராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச மருத்துவ முகாம்
நாமக்கல், ஆக.13- சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் முன்னேற்ற கழ கம் சார்பில் நாமக்கல்லில் இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் செவ்வாயன்று (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நாமக்கல் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவ மனை, நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை சிப்லா மற்றும் ஆல்பா பாலி கிளினிக் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாமக்கல் பேட்டை ஜாமியா மஸ்ஜீத் மகாலில் நடை பெற்றது. இம்முகாமில் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவ மனை தீபம் குழு சார்பாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப் பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. நாமக்கல் அரவிந்த் மருத்துவமனை சார் பில், எலும்பு மூட்டு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான முகாம் நடைபெற்றது. பெண் களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு நடத்தப்பட்ட இம்முகா மில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்ற னர்.