கோவை, ஜூலை 17- 7- இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்களை விற்கும் சமூக விரோத கும்பல்களிடம் இருந்து இளைஞர்களை பாது காக்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய, நகர மாநாடுகள் வலியுறுத் தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் 10 ஆவது அன்னூர் ஒன்றிய மாநாடு அன்னூர் மகரிஷி ஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. அன்னூர் ஒன்றிய தலைவர் சர வணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை வாலிபர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் சந்திர போஸ் துவக்கிவைத்து உரையாற் றினார். மாவட்ட குழு உறுப்பினர் ந.ராஜா வாழ்த்தி பேசினார். இதில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் அன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைத் திட தீர்வு காண வேண்டும். அன்னூ ரில் வாய்ப்புள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்த வேண் டும். அன்னூர் அரசு மருத்துவம னையை தரம் உயர்த்தி, படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதுடன் இரத்த வங்கி அமைத்திட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில் ஒன்றிய தலைவ ராக பிரதீப், ஒன்றிய செயலாளராக ரமேஷ், பொருளாளராக கார்த்தி, துணை செயலாளராக சரவணன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட அன் னூர் தாலுகாக குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டை நிறைவு செய்து வாலிபர் சங்க கோவை மாவட்ட செயலாளர் கனகராஜ் உரையாற்றி னார். மாநாட்டில் ஏராளமான இளை ஞர்கள் பங்கேற்றனர்.
கோவை வடக்கு
இதேபோன்று கோவை வடக்கு நகர 13 ஆவது மாநாடு கணபதி சிஐ டியு இன்ஜினியரிங் சங்க அலுவல கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வடக்கு நகர தலைவர் நிசார் அகமது தலைமையில் நடைபெற்ற மாநாட்டை வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார் துவக்கிவைத்து உரையாற்றினார். வாலிபர் சங்க முன்னாள் வடக்கு நகர குழு தலைவர் சுந்தரம் மற்றும் வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப் பினர் எஸ்.பாரதி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். கோவை மாநகர பகுதிகளில் அதிகரித்து வரும் போதை பொருட் கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். கோவை மாநகர பகுதி முழுவதும் உடற்பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். மாநகர பகு திகளில் சிதிலமடைந்த சாலை களை சீரமைக்க வேண்டும். கோவையில் குடிநீரை தனியா ருக்கு தாரை வார்க்கும் சூயஸ் ஒப் பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து வடக்கு நகர தலைவராக நிசார் அகமது, செயலாளராக விக்னேஷ், பொரு ளாளராக சந்திரசேகர் உள்பட 11 பேர் கொண்ட வடக்கு நகர குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் எம். விவேகானந்தன் நிறைவுரை ஆற்றி னார்.
பொள்ளாச்சி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13ஆவது பொள்ளாச்சி தாலுகா மாநாடு அரிமா சங்க கட்டி டத்தில் தோழர் முருகேசன் நினை வரங்கில் ஞாயிறன்று நடைபெற் றது. தாலுகா தலைவர் கவிபாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்,மணிபாரதி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செய லாளர் வி,ஆர்,பழனிச்சாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. மகாலிங்கம் ஆகியோர் மாநாட் டினை வாழ்த்தி பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ,அன்பரசன் வேலை அறிக்கை முன்வைத்தார். பொள் ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சி அரசுக்கலைக் கல்லூரியில் இந் தாண்டே முதுகலை பாடப்பிரிவுக ளையும், கூடுதலான இளங்கலை பாடப்பிரிவுகளையும் சேர்த்திட வேண்டும். பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பொள்ளாச்சி கிராமப்புரங்களில் உள்ள சிதிலமடைந்த அரசுப் பள்ளி களை சீரமைத்திட வேண்டும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை யில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதி களை உறுதிபடுத்த வேண்டும். உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவராக ரமேஷ் கண்ணன், செயலாளராக மணியாழன், பொருளாளராக எஸ்.அழகர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட புதிய தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட துணைச் செய லாளர் எஸ்,துரைசங்கர் உரையாற் றினார். முடிவில் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய, தாலுகா, நகர மாநாடுகளில் திரளான இளைஞர் கள் பங்கேற்றனர்.