districts

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஆக.16- ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் புதனன்று ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதனன்று மதியம் 12 மணியளவில் ஒக்கேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிவாகம் தடை விதித்தது. கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிறைந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் மற்றும் கபினி அணை களில் இருந்தும் தமிழகத்திற்கு விநாடிக்கு 14,134 கனஅடி தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதையடுத்து, 3 நாட்களுக்கு பிறகு தமிழக,  கர்நாடக எல்லையான பிலிகுண்டு வழி யாக ஒகேனக்கலுக்கு புதனன்று காலை நிலவரபடி 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிபடியாக அதிகரித்து மதியம் 1 மணியளவில் விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒக்கேனக்கலில் உள்ள  ஐவர் பாணி அருவி, சினிஅருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.