districts

கொல்லிமலை அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

நாமக்கல், ஆக.30- கொல்லிமலை பகுதிகளில் கனமழையால் அருவிகளில்  நீர்வரத்து அதிகரித்துள்ளது.   நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பேரூராட்சி உள்ளது. இது, 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத் தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன்  உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். கொல்லிமலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு, அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொல்லிமலை பகுதியில்  செவ்வாயன்று  இரவு சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.  இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா  அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து மாசிலா அருவியில் பராமரிப்பு பணி  நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மற்றும் நம்ம அருவியில் மட்டும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.