districts

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பக்தர்களுக்கு கட்டுப்பாடு

கோவை, ஜூன் 21- யானைகள் நடமாட்டம் அதிக ரித்து காணப்படுவதால், மருதமலை கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்க ளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து  வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள் ளது. பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவை மருதமலை கோவி லுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வருகை புரிகின்ற னர். அதேசமயம் சமீப நாட்களாக மருதமலை, தொண்டாமுத்தூர் பகு திகளில் காட்டு யானைகள் நடமாட் டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்லும் வழி பாதையில் காட்டு  யானை கடந்து சென்றது பக்தர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், செவ்வாயன்று மருத மலை அருகே உள்ள ஐஓபி காலணி யில் 28 வயது மதிக்கத்தக்க நபரை  காட்டு யானை தாக்கியதில் அவர் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இதனையடுத்து, காட்டு யானை கள் வனப்பகுதிகளில் இருந்து வெளி யேறாத வண்ணம் நடவடிக்கை எடுக் குமாறு பொதுமக்கள் சமூக அலுவ லர்கள் என பலரும் தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்துள்ளனர்.  இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவில் நடைபாதை மற்றும் சாலை யில் செல்லும் நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்று மாறும்,  முடியும் பட்சத்தில் பக் ்தர்களை நடைபாதையில் அனுமதிக் காமலும், பக்தர்களை இரு சக்கர வாகனங்களில் அனுமதிக்காமலும் கோவில் வாகனத்திலேயே அழைத் துச் செல்லும்படி கோவில் நிர்வாகத் திற்கு தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் முன்வாயிலில் உள்ள கதவை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், அதன் அருகில் உள்ள ஒற்றையடி பாதையை முற்றிலுமாக மூடவும்  அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதனை பொதுமக்களுக்கு தெரி விக்கும் வகையில் விழிப்புணர்வு பல கைகள் வைக்கும்படியும், கண்கா ணிப்பு ஆட்களை நியமிக்கவும், தவ றும் பட்சத்தில் மனித யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வா கமே பொறுப்பேற்க வேண்டும்  என  வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.