சேலம், ஏப்.21- சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் என்றாலே அனைவரின் நினை வுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி யாகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வர கம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தி யாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபு ரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற் பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்ப தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது. வழக்கமாக மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக் கும். ஆனால், இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடு மையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க் கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்க ளுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிக ரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உட்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது. சேலம் மார்க் கெட்டிற்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள் ளது. ஆனாலும், சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வர வில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்தாண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால், இந்தாண்டு தற் போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித் துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக் கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம் பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிக ரிக்க வாய்ப்பில்லை. மே மாதம் தொடக்கத் தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறை யும், என்றார்.