பட்டாசு புகையால் காற்றின் மாசு அளவு அதிகரிப்பு
கோவை, நவ.13- கோவையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட அதிகபட்ச மாசு அளவு 197 ஆக இருப் பது தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் திங்களன்று கொண் டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பட்டாசுகள். வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததால் ஏற்படும் காற்று மாசு குறித்து கோவையில் இரண்டு இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அளவீடானது செய்யப்பட்டது. கவுண்டம்பா ளையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் இந்த அளவீடு செய்யும் பணியானது நடத்தப்பட்டது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியில் மாசு அளவு 187 ஆகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசு அளவு 197 ஆகவும் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட் சம் 200 க்கு மேலாக இருக்கும் காற்றின் அளவு மோசமானது என இருக்கும் நிலையில், கோவையை பொறுத்தவரை மாசு அளவு அபாயகரமாக இல்லை என தெரியவந்துள்ளது. இதேபோல கோவை மாவட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டும் மொத்தம் 35 கோடி அளவிற்கு மது விற்பனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தவிர பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்து காரண மாக 16 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களின் பெரும் பாலானோர் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில், 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையன்று மது விற்பனை அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனியன்று திருப்பூர் மாவட்டத்தில் ரூ.12.58 கோடிக் கும், தீபாவளியன்று ரூ.11.76 கோடிக்கும் என மொத்தம் கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் ரூ.24.34 கோடிக்கு மதுவிற் பனையாகியுள்ளது.
குப்பை கிடங்கில் தீ விபத்து
பள்ளிபாளையம் நவ.13- பள்ளிபாளையம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து ஏற் பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம் பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான, குப்பை கிடங்கு ஒன்று ஆயக்காட்டூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. திங்க ளன்று மாலை 4 மணி அளவில் குப்பை கிடங்கில் உள்ள ஒரு பகுதியில் தீ மளமளவென பரவியது .இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக வெப்படை தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்த வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் முழுமையாக அணைத்த னர். மேலும் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராதவிதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரை உடனடியாக நிறுத்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அறைகூவல்
கோவை, நவ. 13- இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோவையில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் முடி வெடுத்துள்ளது. இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் ஒரு பகு தியான காசாமீது கடந்த 7 ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதனால் காசா வில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அப்பா விப் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், போரின் நெறிமுறைகளை மீறி இஸ்ரேலின் தாக்குதலில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள் ளனர். பெண்கள், முதியோர் என தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் அரசு காசாமீது தொடுத்துள்ள இன அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர் இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகளின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக வரும் 20 ம் தேதி மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என்றும் இந்த போராட்டத்திற்கு இடது சாரி மற்றும் முற்போக்கு, பெரியாரிய அம்பேத்கரிய அமைப்புகளை அழைப்பது என்று கோவை யில் நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகமான ஜீவா இல் லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, பொருளா ளர் சி.தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், சிஐடியூ மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசன் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பரமணி யம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பட்டாசு வெடித்த நபர் மரணம்
ஈரோடு, நவ. 13- பெருந்துறை அருகே நள்ளிரவில் பட்டாசு வெடித்த நபர் மரணமடைந்தார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே அரிசன காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி (41). மனைவி விஜயாவை விட்டு பிரிந்து வாழ்ந்த இவர் தீபாவளியன்று இரவு வழக்கம் போல் தான் தங்கும் டீக்கடைக்கு அருகில் பட்டாசு வெடித்துள்ளார். போதை யில் இருந்தாக கூறப்படும் நிலையில், இவர் வெடித்த பட்டாசு ஏற்படுத்திய விபத்தில் இறந்து உள்ளார். இதுகுறித்து பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள் ளனர்.
கன்னிவாடி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடு விற்பனை
திருப்பூர், நவ.13- திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளியன்று கன்னிவாடி சந் தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகள் கூறியதாவது, இந்த வார சந் தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதி யில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்ப னைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப் பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச் சிக்காகவும் கொண்டு செல்கின்றனர். ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததா லும், மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியா பாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடு களை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந் தனர் இதனால் கடந்த வாரங்களில் இறைச் சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயி ரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத் திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் இந்த வாரம் நடை பெற்ற சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற் பனை நடைபெற்றுள்ளது என்று கூறினார்.
வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 6 பேர் மீது தாக்குல்
உதகை, நவ. 13- நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச் சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் வீட்டில் வளர்கப்படும் நாயை பிடிக்க வந்த சிறுத்தை திடீரென வீட்டில் புகுந்தது. இதனையடுத்து, உடனடியாக குன்னூர் தீயனைப்பு நிலை யத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படை யில் வந்த தீயனைப்பு துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தப்போது கண்ணன், முரளீதரன், கிருஷ்ணக் குட்டி ஆகியோரை தாக்கியது. மேலும், வீட்டின் உரிமையா ளர் விமலா, வருவாய்துறை அலுவளர் சுரேஷ், செய்தியாளர் திருநாவுக்கரசு, ஆகியோரையும் சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் குன்னூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுத்தை வீட்டில் இருந்து வெளியேறிய காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை வனத்துறை அதிகாரி கள் உறுதி செய்தனர்.
தொடர் விடுமுறை குவிந்த சுற்றுலாப் பயணிகள்
நாமக்கல், நவ.13- தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கத வணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பய ணிகள் குவிந்தனர். குட்டி கேரளா என்று சுற்றுலாப் பயணிகளால் அழைக்கப் படும் இயற்கை எழில் நிறைந்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர் திறப்பு பகுதியில், திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அங் குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப் பாலம், நீர் உந்து நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். திரளான சுற்றுலாப் பயணிகள் கரையோர பகுதியில் குடும் பத்துடன் பொழுதை கழித்தனர். மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரி தாய் சன்னதி, காவிரிக்கரை படித்துறை விநாயகர் கோவில் உள் ளிட்ட தலங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலாப் பயணி கள் குவிந்ததால் இப்பகுதிகள் உள்ள வியாபாரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகு தியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருமாநல்லூர் அருகே விபத்து: திமுக கவுன்சிலர், அவரது குழந்தை பலி
திருப்பூர், நவ. 13 - பெருமாநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் கோவை போத்தனூர் செட்டிபாளையம் பத்தாவது வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளை யம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (27). இவர் செட்டி பாளையம் பேரூராட்சி பத்தாவது வார்டு திமுக கவுன்சிலராக வும், தி.மு.க. வட்டச் செயலாளராகவும் உள்ளார். திங்களன்று அதிகாலை சந்தோஷ்குமார், தனது மனைவி இந்துமதி (23) மற்றும் 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோருடன் தனது காரில், கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அதே போல, கோவை மாவட்டம் செளரிபாளை யம் பகுதியை சேர்ந்த சித்தார்த் (22) தனது பிஎம்டபிள்யூ சொகுசு காரில், தனது நண்பர்களான க்ளாட்வின் (21), ஏன்டி ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோருடன் செங் கப்பள்ளியில் உள்ள காபி கடையில் காபி குடிப்பதற்காக அதி வேகமாக சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமா நல்லூர் அருகே ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக காரை ஓட் டிய சித்தார்த் தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சந்தோஷ்குமார் காரின் பின்பக்கம் அதிவேகமாக மோதினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த சந்தோஷ்குமார் ஓட்டிச்சென்ற கார் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கவுன்சிலர் சந்தோஷ் குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். மனைவி இந்துமதி பலத்த காயங்களுடன் சுயநி னைவின்றி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சொகுசு காரில் வந்த ஐந்து பேரும் லேசான காயங்களுடன் திருப்பூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக களரி அணிக்கு வரவேற்பு
திருப்பூர், நவ.13 - கோவாவில் இருந்து தேசிய விளையாட்டுப் போட் டிகளில் பங்கேற்று மூன்றா வது இடம் பிடித்த தமிழக அணி வெள்ளியன்று காலை மடத்துக்குளம் வருகை தந் தது. களரி பைட் வீரமணி ஆசான் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். தமி ழக அணியில் இடம்பெற்ற மடத்துக்குளத்தைச் சேர்ந்த களரி வீரர்கள் நான்கு பதக் கங்கள் பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது இடம் அந்த அணிக்கு கிடைத்திருக்கி றது.கோவாவில் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று விட்டு வருகை தந்த வீரர்களுக்கு மடத்துக் குளத்தில் உற்சாகமான வர வேற்பு அளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் திரளான பொதுமக் கள் கலந்து கொண்டனர்.