districts

நீலகிரி மாவட்டத்தில் புரளும் கருப்பு பணம் மந்த நிலையில் வருமான வரித்துறை

உதகை, மே 5- நீலகிரி மாவட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் கருப்பு பணம்  புரளுகிற நிலையில், வருமான வரித் துறையென ஒன்று செயல்படுகிறதா? என மக்கள் அதிருப்தியை வெளிப் படுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக, வெளி  நாடு, மாநில, மாவட்டங்களைச்  சேர்ந்த பலர் நீலகிரி மாவட்டத்தில்  நிலங்களை வாங்குவதில் கோடிக் கணக்கான ரூபாய்களை கொட்டி  வருவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.  பொதுவாக மலை மாவட்டங் களில் நிலம் வாங்குவது என்பது  அவ்வளவு எளிதான காரியமல்ல  என்றபோதிலும், பினாமிகள் பெய ரில் இதுபோன்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றதாக புகார்  எழுந்துள்ளது. கருப்பு பணத்தை செலவிட ஏற்ற இடமாக நீலகிரியை  தேர்ந்தெடுக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய வர்களின் நிலங்கள் இடைத்தரகர் கள் மூலம் தங்கள் பெயரிலும் பினாமி கள் பெயரிலும் வாங்கி, வணிக  வளாகங்களாகவும், ரிசார்ட்ஸ் களாகவும் மாற்றி வருகின்றனர். அது  மட்டுமல்லாமல் வெளி மாவட்டங் களிலிருந்து வந்து நீலகிரியில் பல் வேறு தொழில்களில் கொடிகளை முதலீடு செய்து வருமான வரி கணக்கு காட்டாமல் அரசை ஏமாற்றி  வருகின்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு  செய்பவர்கள் மீது வருமான வரித் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவ தாகவும், கண் முன் சாட்சியாக உள்ள  நிறுவனங்கள் மீது கூட இத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்ப தன் பின்னணியில் கையூட்டு உள்ள தோ என்கிற சந்தேகத்தை பொது மக்கள் எழுப்புகின்றனர். ஒன்றிய அரசின் கீழ்  உள்ள இத்துறை பாஜக விற்கு எதிராக பேசுபவர்கள் மீது மட்டுமே ரெய்டு என்கிற பெயரில் வேலை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.  இயற்கை எழில் கொஞ்சும் நீல கிரி மாவட்டம், இதன் தன்மையை  கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, தற்போது கான்கிரீட் கட்டடங்களின் விளை நிலமாக மாற்றப்பட்டுள்ள சூழலில், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு, கருப்பு பணத்தை வெள்ளையாக்க நினைப்பவர்கள் இங்கு முதலீடு செய்வதால், நீலகிரி  மாவட்டம் தனது இயல்பை தொலைத்து விடும் என சமூக ஆர்வ லர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.