உடுமலை, பிப்.26- உடுமலையை சேர்ந்த களரி பயட்டு வீரர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஊக்கத்தொகை வழங்கினார். 37 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது. இதில் களரிப் போட்டி முதல் முறையாகச் சேர்க்கப்பட்டது. தமிழக அணி சார்பாக 8 பேர் கலந்து கொண்டு. அதில் நான்கு பேர் வெங்கல பதக்கம் வென் றனர். விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெங்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெங்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெங்கலப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கும், திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் வெற்றி பெற்ற சுர்ஜித்திற்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உத யநிதி ஸ்டாலின் சென்னை கலைவானர் அரங்கில் நடை பெற்ற நிகழ்ச்சியில் உரிய ஊக்கத்தொகை வழங்கி சிறப் பித்தார். மேலும்,சென்னை கலைவானர் அரங்கில் தேசிய, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற 601 பேருக்கு ரூ.16.31 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களின் மேற்படிப் பிற்கும், குடும்ப பொருளாதாரத்திற்கும் பெரும் உதவிக்கர மாக இருக்கும் என்றும், ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ச ருக்கு தமிழ்நாடு களரிப் பயட்டு செயலாளர் வீரமணி ஆசான் நன்றி தெரிவித்துள்ளார்.