தருமபுரி, ஏப்.6- தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சியினை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத் தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதனன்று துவங் கியது. இந்த அறிவியல் கண்காட்சியில் தருமபுரி மாவட்டத் தில் உள்ள 225 அரசு உயர்நிலைப் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் உணவு,பொருள்கள், நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ளவைகளின் உலகம், இயங் கும் பொருள்கள் மனிதர்கள் மற்றும் கருதுகோள்கள், பொருள்கள் எப்படி இயங்குகின்றன, இயற்கை நிகழ்வு கள், இயற்கை வளங்கள் என்ற 7 தலைப்புகளின் கீழ் 93 அறிவியல் படைப்புகளை காட்சிபடுத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் து.கணேஷ் மூர்த்தி, தருமபுரி வட்டாட்சியர் இராஜ ராஜன், தருமபுரி கல்வி மாவட்ட அலுவலர் டி.சண்முக வேல், உட்பட அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பள்ளி களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரி யைகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.