districts

img

புதிய வழித்தட பேருந்துகள் துவக்கி வைப்பு

திருப்பூர் நவ. 9 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக திருப்பூர் மண்ட லம் சார்பாக திருப்பூர் மாநக ரின் புதிய வழித்தடங்களுக் கான பேருந்து வியாழக்கி ழமை முதல் இயக்கப்பட் டது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தி லிருந்து கழுவேரிப்பாளையம் ஆதிதிராவி டர் குடியிருப்பு வரையும், நெருப்பெரிச்சல், வாலிபாளையம் வழியாக பெருமாநல்லூர் வரையிலும், திருக்குமரன் நகர் வரையிலும்,  கூலிபாளையம், வாலிபாளையம் உள்ளிட்ட  பகுதிகளுக்கும் பேருந்துகள்  இயக்கப்பட் டது. மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் சாமிநாதன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்து ராஜ், மாநக ராட்சி மேயர் தினேஷ், துணை மேயர் பால சுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.