districts

img

புதிய திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு

திருப்பூர், டிச.14- திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை  உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில்  மகளிர் சுய  உதவிக்குழு கட்டடங்களை திறந்து வைத்தும், 15 ஆவது நிதிக் குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில்  ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினை தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழ னன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குடி மங்கலம் நால் ரோட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊராக  வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.76.33 லட்சம் மதிப்பீட்டிலும்,   ஆமந்தகடவு ஊராட்சி, அம்மாபட்டியில் ரூ.76.35 லட்சம் மதிப் பீட்டில் புதிய மகளிர் சுய உதவிக்குழு கட்டங்களை திறந்து  வைத்து, குடிமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில்  15 ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி  மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும்  பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மகேந்திரன், செந்தில் கணேஷ் மாலா, பொறியாளர்  சசிக்குமார்,     திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர்  இல.பத்மநாபன்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.