திருப்பூர், மார்ச் 2- திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 60 பேர் புதனன்று (மார்ச் 2) பொறுப்பேற்றுக் கொண்ட னர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட் டது. இந்நிலையில் புதிதாக வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா புதனன்று நடைபெற்றது. அதன் படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் புதிய மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா காலை 10 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வ ராஜ், வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜய குமார் ஆகியோர் முன்னிலையில் மாந கராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி புதிய மாமன்ற உறுப்பினர்களுக் குப் பதவி பிரமாணம் செய்து வைத் தார். அதன்படி 1ஆவது வார்டு முதல் வரிசைப்படி 60 வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் மேடைக்கு வந்து பதவி ஏற்பு உறுதி மொழியை வாசித்து கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர் கள் ஒவ்வொருவருக்கும் ஆணையர் கிராந்திகுமார் பாடி பூங்கொத்து மற்றும் புத்தகம் ஒன்றையும் நினை வுப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித் தார்.
சிபிஎம் கவுன்சிலர் பதவியேற்பு
முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பின ராக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.மணி மேகலை பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழா மாநகராட்சி அலுவல கத்தில் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடத்தப்பட்டது. அந்த அறையில் பதவி ஏற்ற புதிய மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் மற் றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இட நெருக்கடி இருந்த நிலையில் பதவி ஏற்க வந்த மாமன்ற உறுப்பினர்களுடன் வந்தவர் களை, இந்த அரங்கத்துக்கு வெளியே அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த இருக்கைகளில் அமரும்படி கேட் டுக் கொண்டும் பலர் மாமன்ற கூட்டரங் கத்திற்கு உள்ளேயே இருந்தனர். இதனால் இடநெருக்கடி ஏற்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தின் முன்புற திறந்தவெளி வளாகத்திலும் எல்இடி திரையில் மாமன்ற உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. முன்னதாக இந்நி கழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பதவி ஏற்றதற்கு பின் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் குழுப் படம் எடுத் துக் கொண்டனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 ஆவது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் புதனன்று பதவியேற்றுக்கொண்டார்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 14 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜன், புதனன்று பதவியேற்றுக்கொண்டார்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 ஆவது வார்டு உறுப்பினர் பார்வதி புதனன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ஊத்துக்குளி பேரூராட்சியில் 7ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி புதனன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
வெள்ளகோவில் நகராட்சி 7ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மு.ராதாமணி புதனன்று நகர்மன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
உடுமலை தாலுகா தளி பேரூராட்சியில் 16 வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் புதனன்று பதவி யேற்றுக் கொண்டனர்.
உடுமலை தாலுகா தளி பேரூராட்சி 17 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாணிஸ்வரி புதனன்று பதவியேற்றுக் கொண்டார்.
தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேருராட்சி 4 ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சிபிஎம் வேட்பாளர் மகுடீஸ்வரி புதனன்று பதவியேற்றுக் கொண்டார்.