districts

img

திருப்பூர் அரசு கல்லூரிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

திருப்பூர், ஜன. 21 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் எல். ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கள் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுமார்  11,000 சதுர அடியில் மூன்று தளங்களை கொண்ட 10 வகுப்ப றைகள் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டிலும், எல்.ஆர்.ஜி.  அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 24,000 சதுர அடியில்  நான்கு தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் ரூ.3 கோடியே  74 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டு மாணவ மாண வியர் பயன்பாட்டிற்காக்க ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு  முதலைச்சர் காணொளி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை கூடுதல் வகுப்பறைகளை மாணவ, மாணவியர் பயன்பாட்டிற் காக திறந்து வைத்தார்.  இக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழா நிகழச்சி யில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  க.செல்வராஜ் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர்கள் எழிலி, கிருஷ் ணன், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர் கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.