திருப்பூர், ஜன.24- காங்கேயம் நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று துவக்கி வைத் தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பேருந்து நிலை யத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொடு முடி - கோபி வழித்தடத்தில் முத்தூர், காங்கேயம், ஊத்துக் குளி, செங்கப்பள்ளி, குன்னத்தூர் வழியாக செல்லும் புதிய பேருந்து மற்றும் பொள்ளாச்சி - கரூர் வழித்தடத்தில் குடி மங்கலம், தாராபுரம், மூலனூர் மற்றும் சின்னத்தாராபுரம் வழி யாக செல்லும் புதிய பேருந்து சேவைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புத னன்று துவக்கி வைத்தார். மேலும், சிவன்மலையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார், பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்) மாரியப்பன், உள்ளாட்சி அமைப்புக ளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.