districts

img

தோழா இசைப் பள்ளி ஆத்துப்பாளையத்தில் துவக்கம்

திருப்பூர், ஆக.16- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு சார்பில் “தோழா” இசைப்பள்ளி ஆத்துப்பாளையம் கிளை அலுவலகத்தில் ஞாயிறன்று துவங்கப்பட்டது. வாலிபர் சங்க வடக்கு ஒன் றிய தலைவர் ரேவந்த் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செய லாளர் சந்தோஷ் வரவேற்றார். இந்த இசைப் பள்ளியை வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி ரிப்பன் வெட்டி, நரம்பு இசைக் கருவியை (கிட்டார்) வாசித்து  துவக்கி வைத்தார்.  ஆத்துப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாதர் கிளைச் செயலாளர் கீதா  லட்சுமி, ஆத்துப்பாளையம் கட்சிக் கிளை  செயலாளர் அ.சங்கர், கட்சி உறுப்பினர் ஐயா சாமி, வாலிபர் சங்க ஆத்துப்பாளையம் கிளை லோகேஷ், அருண், பாலாஜி ஆகி யோர் குத்து விளக்கு ஏற்றினர். மாதர் சங்க  ஒன்றியச் செயலாளர் சி.பானுமதி தோல் இசைக்கருவி வாசித்து துவக்கி வைத்தார். வாலிபர் சங்கம் மாவட்டப் பொருளாளர் கு. பாலமுரளி காற்று இசைக்கருவியை வாசித்து துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் பாண்டியன், ஒன்றியக்  குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் கலைவாணி நன்றி கூறி னார்.