இடதுசாரி இயக்கத்தின் உலைக்கலமாக உருவான கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம், நடுவில்கரை கிராமத்தில் வேலுக் குட்டி- ஹேரோனா தம்பதியினருக்கு இரு சகோதரிகளோடு, ஒரே மக னாக பிறந்தவர் 1923ஆம் ஆண்டு மார்ச் 5 தேதியன்று பிறந்தவர் டி. பாலன். தனது பள்ளி படிப்பை முடித்த தும், 1940 ஆம் ஆண்டு தனது இளம் வயதிலேயே, கோவை போத்தனூர் பகுதியில் ஒரு பீடி சுத்தம் தொழிலா ளியாக, தனது, வாழ்க்கையை துவங் கினார். இளம் வயதிலேயே கம்யூனிஸ் டாக மாறிய தோழர் டி.பாலன், 1946ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின் போது தீவிரமாக பங்கேற்று செயல் பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அவசர காலத்தில் 1948 ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு களில் தலைமறைவாக இருந்து தொழிற்சங்கத்தை வழி நடத்தும் பணி யில் ஈடுபட்டார். 1956ஆம் ஆண்டு கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக் ஜெனரல் இன்ஜினியரிங் அண்டு மெக்கானிக்கல் ஒர்க்ஸ் யூனியனின் உபதலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1961ஆம் ஆண்டு முதல் தனது இறுதி மூச்சு வரை 1980 மார்ச் 25 வரை பொதுச்செய லாளராக செயல்பட்டார். அந்த காலகட்டம் என்பது கடுமை யான அடக்குமுறையும், கெடுபிடி களும் நிறைந்த காலமாகும், முதலாளிகள் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர் கொண்டு, உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தொழிலாளிக்கு கிடைத்ததே மிக மிக அரிதான சட்ட சலுகைகளும், குறைந்த ஊதியமும்தான். இத் தகைய சூழலில் தோழர் டி.பாலன் முன் முயற்சியால் தொடர் இயக் கத்தை முன்னெடுத்து, தொழி லாளிகளுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்ட சலுகைகளும், ஓரளவு ஊதிய உயர்வும் கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து ஆயிரக் கணக்கில் தொழிலாளர்கள் சங்கத் தில் இணைந்தனர். போனஸ் பெறுவதில் ஆட்சியா ளர்கள் மூலம், உட்சவரம்பு தீர்மா னிக்கப்பட்டது.
இது தொழிலாளர் களுக்கு, பெறும் பாதிப்பை ஏற் படுத்தியது. இதனை எதிர்த்து வாதிட்டு, தொழிற்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோரிக்கைகளை, நிர்வாகத்தினரை ஏற்கவைத்து அமல் படுத்திய பெருமைக்குரிய சாதனை யாளர் தோழர் டி.பாலன். தொழிலாளர்களின் போனஸ் தொகையோடு, அவர்களின் குடும் பத்தாரின் சீருடைதுணி அலவன்ஸ், சுற்றுலா அலவன்ஸ் என கூடுதல் தொகையை பெற்றுத்தந்தார். இதற்கு “பாலன் பார்முலா” என்று பெருமையாக அழைக்கப்பட்டது. போனஸ் உச்சவரம்பிற்கு மேல் போனஸ் பெரும் வாய்ப்பு இந்தி யாவிலேயே கோவை மாவட்டத்தில், அதுவும் இன்ஜினியரிங் தொழிலா ளர்களுக்கு மட்டுமே, தற்போது வரை, பெற்றுவரும் நிலை தொடர் கிறது என்பது, தோழர் டி.பாலன் அவர்களின் சரித்திர சாதனை யாகும். தோழர் டி.பாலன் அவர்கள் இன்ஜினியரிங் பொதுச்செயலாள ராகவும், சிஐடியுவின் மாவட்ட செய லாளராகவும், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினராகவும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு, கோவை, தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார். உழைப்பாளி மக்களின் பேரன் புத்தோழனாய், பாட்டாளி வர்க்கத் தின் படைத்தளபதியாய் திகழ்ந்த தோழர் டி.பாலன் நூற்றாண்டு விழா வில் வர்க்க ஒற்றுமையை பலப்படுத் தவும், இழந்து விட்ட உரிமைகளை மீட்கவும், இருப்பதை பாதுகாக்கவும் டி.பாலன் வழியில் முன்னேறிச் செல் வோம்.