districts

img

கோவையில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற 18 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 17 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்ட வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராமலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான், வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். 6ஆவது முறையாக செஞ்சி பேரூராட்சி திமுக வசமானது குறிப்பிடத்தக்கது.


விழுப்புரம் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பற்ற 42 வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.nஜயசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.