கோவை, அக்.19- கோவை மாநகராட்சி யின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் வியாழ னன்று பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசும்போது, எனக்கு சென்னை மாநக ராட்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. பொது மக்களுடைய கோரிக் கைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செயல்படுத்து வேன் என்று கூறினார். மேலும், கோவை மாநக ராட்சியில் தூய்மை பணி யாளர்கள் என்ன பிரச்சனை என்பதை கேட்டறிந்து அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை சக அதி காரிகளுடன் கலந்து ஆலோ சித்து அதற்கு உரிய தீர்வை ஏற்படுத்துவேன் என தெரி வித்தார்.