கோவை, ஜூலை 11- கோவையில், சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கி யுள்ளது, இதனை வேளாண் மக்களும், பொதுமக்களும் ஆர் வத்தோடு கண்டு களிக்கின்றனர். கோவை மாவட்டம், கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22 ஆவது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங் கியது. இக்கண்காட்சி புதனன்று துவங்கி 15 ஆம் தேதி யன்று வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட் களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட் டுள்ள வேளாண் விவசாயப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட் டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வேளாண் நிறுவனங்களும், மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா உள் ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இவர்களது கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தி உள்ளனர். இக்கண்காட்சி யில், இந்தியாவை சேர்ந்த நாட்டுமாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும், பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிக ளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு பல்வேறு ரக செடி கள், பூச்செடிகள் ஆகியவை விற்பனை நடைபெறுகிறது. புதன்கிழமை துவங்கிய இந்த சர்வதேச வேளாண் கண் காட்சி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பி டத்தக்கது.