districts

img

சாலை மேம்பாட்டுப் பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு

திருப்பூர், ஆக.21- காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம்  சிவன்மலை ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் பட்டு வரும் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கத்தை தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் சிவன்மலை ஊராட்சி எருக்கலங்காட்டுபுதூர், பொத்தியாம்பாளையம், பாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல மைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம  மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் 6 சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத் தார். இதில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட்பட துறை  சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.