districts

img

தடகள விளையாட்டுப் போட்டிகள் அமைச்சர் துவக்கி வைப்பு

ஈரோடு, செப். 3- ஈரோடு மாநகராட்சி, வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதா னத்தில் அமைச்சர் சு.முத்துசாமி. தடகள விளையாட்டு சங்கம்  சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கி  வைத்தார். அப்போது அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ஈரோடு  மாவட்ட தடகள சங்கம் ஏறத்தாழ 25 ஆண்டு காலமாக  மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 22 ஆண்டு கள் மாவட்டத்தில் போட்டியை நடத்தி விளையாட்டு வீரர் களை ஊக்குவித்திருக்கிறார்கள். அதே போன்று 5 முறை  மாநிலப் போட்டிகளும் நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம்  பேருக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு அந்த போட்டியிலே அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடை கிற வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். வித்யா ராம ராஜன் ஈரோடு மாவட்ட விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற வர் இன்றைக்கு பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி யில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நம்முடைய ஈரோட் டிற்கும் பெருமை சேர்க்கிற அளவிற்கு சாதனையை செய்தி ருக்கிறார். அதேபோல பெங்களுரில் நடைபெற்ற போட்டி யில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாக வந்திருக் கிறார். விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவிலே நம் முடைய மாணவ, மாணவியர்கள் வரவேண்டும் என்ப தற்காக அதற்கான வசதிகளை மேற்கொண்டு வருகின்ற னர் என்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதிஸ் குமார், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்க செயலாளர் எம். கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.