districts

img

இன்றைய சிக்கலான உலகில் புத்தகங்களே தீர்வுக்கு வழிகாட்டும்

திருப்பூர், ஏப். 15 - இன்றைய சிக்கலான உலகில் புத்த கங்களே தீர்வுக்கு வழிகாட்டும் என்று 18  ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வில் பேசியோர் தெரிவித்தனர். திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் வியாழனன்று மாலை புத்தகத் திருவிழா  தொடங்கிய நிலையில் வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன் தலைமை உரையாற்றி னார். அப்போது அவர் கூறுகையில், இன் றைய உலகின் சிக்கலான பிரச்சனை களுக்குத் தீர்வு காண புத்தகங்களே வழி காட்டும் என்று கூறினார். குழந்தைகள் செல் போனில் மூழ்கி இருக்கும் நிலையில் பெற் றோர் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக உருவாக்க முடியும் என்றார். அதேபோல் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் துணைத் தலைவர் மைக்கோ வேலுச் சாமி பேசுகையில், நாம் அறியாத செய்தி களை தெரிந்து கொள்ள வாசிப்பு மிகவும் அவ சியம். சில நாட்களுக்கு முன்பு ஒரு வார  இதழில், நேதாஜி பற்றிய செய்தி வந்திருந் தது. அவர் கடைசியாக பேசிய உரையில், நான் தமிழகத்தில் பிறக்க வேண்டும் என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுவரை நான் இந்த செய்தியை அறிந்திருக்கவில்லை. நவீன தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்கள் இளைய தலைமுறையினரை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் புத்தக வாசிப்புக்கு முக் கியத்துவம் அளிக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தி யாளர் சங்கம் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் பேசுகையில், திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு நிரந்தர கண்காட்சி வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாநகர மேயர் தினேஷ்குமாரிடம் வேண் டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய மேயர், தற்போது பழைய டவுன்ஹால் அரங்கில் கட்டுமானப்பணி நடைபெற்று வரு கிறது. அது முடிவடையும்போது, கண்காட்சி நடத்த வாய்ப்பாக அமையும் என்றார். அத் துடன், அண்ணலே நீங்கள் உங்கள் உயிரை உருக்கி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற தங்க மோதிரத்தை செய்து கொடுத்தீர்கள், ஆனால் நாங்களென்னவோ விரல்கள் இல் லாத தொழு நோயாளிகளாக இருக்கிறோம் என்ற புதுக் கவிதையை மேற்கோள் காட்டி, விடுதலைத் தழும்புகளை ஆற்ற மக்கள் வாழ்வு மேம்பட பணியாற்ற வேண்டும் என்றார். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்ராஜ் பேசுகையில், புத்த கங்கள் முக்கியத்துவம் குறித்து திராவிட இயக்க முன்னோடிகளை சுட்டிக்காட்டி விரி வாகப் பேசினார். முன்னதாக இந்த நிகழ் விற்கு வந்தோரை பாரதி புத்தகாலயம் மேலா ளர் க.நாகராஜ் வரவேற்றார். 53 ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக வர வேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.