கோவை மாநகர போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், ஒரு நாள் யோகா பயிற்சி நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் போலீசாருடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.