districts

நாகர்கோவில் ,தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

ஏடிஎம் மூலம் ரூ.7.33 லட்சம் திருட்டு

நாகர்கோவில், ஜூன் 23- குமரி மாவட்டம் தடிக்கா ரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் செலின் மேரி. இவர் தடிக்காரன்கோணத் தில் உள்ள தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவ ரது வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் 4 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை சென்னை உள்பட பல ஏ.டி.எம்களில் இருந்து 7.33 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் அடிக்கடி திருடி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர் பாக மாவட்ட குற்றப்பிரிவில் செலின்மேரி அளித்த புகா ரின் பேரில் காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே வங்கியில் இருந்து மானேஜர் பேசு கிறேன் என்ற போர்வையில் மர்ம நபர்கள் பேசி ஏடிஎம் கார்டு நம்பரை வாங்கி இவ ரிடம் பணத்தை திருடியது குறிப்பிடத்தக்கது.

மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி சிலைக்கு மரியாதை  

தஞ்சாவூர், ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரி சாமி 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, ஞாயி றன்று மரியாதை செலுத்தி னார். பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், கோட்டாட்சியர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நெய்தல்  கோடை விழா

நாகப்பட்டினம், ஜூன் 23- நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ‘நெய்தல் கோடை விழா வெள்ளிக் கிழமை மாலை ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்துத் துவக்கி வைத்தார். மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் செ.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.